தவறான சிகிச்சையால் சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு - அரசு பொறுப்பேற்க வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தல்..!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதுடன், தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வலது கால் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த மருத்துவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியாவின் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானத்தை சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும், மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து என்று வானதி ஶ்ரீனிவாசன், குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால், 17 வயதான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். அரசு மருத்துவமனையில் நிலவும் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும்,மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.

எனவே, நாட்டின் சொத்தை பாதுகாக்க தவறியதற்கு, தமிழக அரசும், தமிழக மருத்துவத்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...