தவறான சிகிச்சையால் சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு - அரசு பொறுப்பேற்க வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தல்..!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதுடன், தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வலது கால் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த மருத்துவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியாவின் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானத்தை சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும், மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து என்று வானதி ஶ்ரீனிவாசன், குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால், 17 வயதான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். அரசு மருத்துவமனையில் நிலவும் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும்,மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.

எனவே, நாட்டின் சொத்தை பாதுகாக்க தவறியதற்கு, தமிழக அரசும், தமிழக மருத்துவத்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...