தவறான சிகிச்சையால் சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு - அரசு பொறுப்பேற்க வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தல்..!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதுடன், தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வலது கால் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த மருத்துவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியாவின் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானத்தை சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும், மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து என்று வானதி ஶ்ரீனிவாசன், குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால், 17 வயதான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். அரசு மருத்துவமனையில் நிலவும் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும்,மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.

எனவே, நாட்டின் சொத்தை பாதுகாக்க தவறியதற்கு, தமிழக அரசும், தமிழக மருத்துவத்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...