மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் 3 நாட்களாக தவிக்கும் 80 வயது மூதாட்டி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே மழை நீர் புகுந்த வீட்டில் 3 நாட்களாக வெளியேற முடியாமல் தவித்து வரும் 80 வயது மூதாட்டியை உடனடியாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள மற்றொரு குறுகிய வீட்டில் அவரது தாய் பாத்திமுத்து என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிலிலேயே அவர் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.



இந்நிலையில் மூதாட்டி இருக்கும் வீடு தாழ்வான பகுதி என்பதால் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் மூதாட்டியை வெளியே அழைத்து வர அவரது மகன் உள்ளிட்ட யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து அவர் உள்ளே சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் அவர் பரிதாபமாக தவித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சையளித்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...