மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் 3 நாட்களாக தவிக்கும் 80 வயது மூதாட்டி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே மழை நீர் புகுந்த வீட்டில் 3 நாட்களாக வெளியேற முடியாமல் தவித்து வரும் 80 வயது மூதாட்டியை உடனடியாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள மற்றொரு குறுகிய வீட்டில் அவரது தாய் பாத்திமுத்து என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிலிலேயே அவர் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.



இந்நிலையில் மூதாட்டி இருக்கும் வீடு தாழ்வான பகுதி என்பதால் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் மூதாட்டியை வெளியே அழைத்து வர அவரது மகன் உள்ளிட்ட யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து அவர் உள்ளே சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் அவர் பரிதாபமாக தவித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சையளித்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...