உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.



அந்த வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொடர்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாடகங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது.



இந்நிகழ்ச்சியானது வரும் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களிலும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், எய்ட்ஸ் நோய் குறித்து தெரிந்து கொள்வதற்கும், எச்.ஐ.வி பற்றிய பயம் விலகிடவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குதல்- புறக்கணித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடத்தபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் திரு.அறிவழகன், ஆய்வக நுட்பனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...