உதகை வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உதகையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகளின் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் அமைந்டதுள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளகாத்திற்குள் நேற்றிரவு 2 சிறுத்தைகள் நுழைந்தன.

பின்னர் அவை அங்குள்ள கதிர்வீச்சு சேகரிப்பு கருவிகள் வழியாக அங்கும் இங்கும் நடந்து சென்று உணவு தேடின. சிறிது நேரத்திற்கு பின்னர் 2 சிறுத்தைகளும் வன பகுதியை நோக்கி சென்றன.

சிறுத்தைகள் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...