பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கை நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து கடை நிலை ஊழியர்களும் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் செயலாக்கம் விரைவில் ஆன்லைன் வழியே தொடங்கும் எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான படிவம் வெளியிடப்பட்டது. அந்த படிவத்தில் அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் அங்கீகார அட்டை அல்லது அரசு இலவச பஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாரியத்தில் உறுப்பினராக சேரமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனையினால், 90 சதவீத பத்திரிகையாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர முடியாது என்றும், பெரும்பாலும் ஊடக முதலாளிகளும் பத்திரிகை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளிலும் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராக சேர முடியும் என்பதையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.

ஆகவே, அச்சு, காட்சி, டிஜிட்டல் என்ற என்ற பாகுபாடின்றி அதில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அனைத்து பத்திரிகையாளர்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சரும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தின் தலைவருமான மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.

அதன்படி வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கான திருத்தப்பட்ட விதிமுறையை விரைவில் வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது.

அதன் தொடர்ச்சியாக மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரிய குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி பத்திரிகையாளர் நலக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்க ஏதுவாக அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் 10 பேர் மட்டுமே நலவாரிய உறுப்பினராக சேர முடியும் என்று இருந்த நிலையில் தற்போது நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய செய்தியாளர் ஒளிப்பதிவாளர் ஆசிரியர் உதவி ஆசிரியர் ஆடியோ இன்ஜினியர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடிய ஊழியர்களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...