கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு

பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறையையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அங்கு குழந்தைகளுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது எனவும் பார்வையிட்டார்.



மேலும் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...