கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு

பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறையையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அங்கு குழந்தைகளுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது எனவும் பார்வையிட்டார்.



மேலும் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...