கோவை கார் வெடிப்பு:வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டாலும் காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு

கோவை கார் வெடிப்பு குறித்த விசாரணை கோப்புகள் அனைத்தும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது.

காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 காவலர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்த பின்னர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

கோவை மாநகர காவல்துறையில் ஏற்கனவே ஒரு ட்ரோன் கேமரா உள்ள நிலையில் அதில் புதுப்பிக்க வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் ஆகியவை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் புலனாய்வு செய்த அனைத்து கோப்புகளும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் மாநகர காவல் துறை அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...