வீட்டை அபகரித்துக் கொண்ட தெருவில் விட்ட மகள் - கருணை கொலை செய்யக்கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ், தனது மகள் அனீஷ் ஆரிஃபா வீட்டை அபகரித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியதால் தன்னை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பெஸ்ட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவர் தனக்கு சொந்தமான வீட்டை தனது மகளே அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது, நானும் எனது கணவரும் எங்களது சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இறந்துவிடவே நான் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.

மேற்கொண்டு இருந்த மற்றொரு வீட்டின் வாடகையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில், எனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா மற்றும் அவரது கணவர் உமர் ஷரீஃப் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டில் குடியேறினர்.

பின்னர் காலப்போக்கில் மகளும் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால் நான் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். இந்த மனுக்கள், தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலையில், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...