திருப்பூரில் ஊராட்சி மன்ற தலைவரை ஜாதி ரீதியாக துன்புறுத்தும் வார்டு கவுன்சிலர்கள் - ஆட்சியரிடம் புகார் மனு

உடுமலைப்பேட்டை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான சிவகுமாரை, 3 வார்டு கவுன்சிலர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர், சிவக்குமார். இவர், இன்றைய தினம் (07.11.2022) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து, மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் என்னை 3 வார்டு கவுன்சிலர்கள், தங்களது சுய நலத்திற்காக மிரட்டி துன்புறுத்தி வருகின்றனர்.

மேலும் எனது வேலையை செய்ய விடாமல் தடுக்கும் வார்டு உறுப்பினர்கள் மூன்று பேரும் ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வேலைகளில் 10 சதவீத கமிஷன் தொகை தங்களுக்கு பெற்று தரும்படி மிரட்டி வந்தனர்.

இதற்கு நான் மறுத்ததால், என் மீது வீண்பழி சுமத்துகின்றனர். மேலும் நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில எனக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டம் நடைபெறாமல் இடையூறு செய்தனர்.

கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்றபோது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் என்னை தள்ளிவிட்டு மிரட்டி லெட்டர் பேடை பிடுங்கி, சில வாசகங்களை எழுதி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினர்.

அந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் என்மீது, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. அந்த கடிதத்தை நான் எழுதவில்லை என்பதை இந்த மனுவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சியில் எந்த பணி செய்ய வேண்டும் என்றாலும் அவர்களிடம் அனுமதி பெற்றே பணிகளை செய்ய வேண்டும் என எச்சரித்து ஜாதி ரீதியாக அவமானப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...