திருப்பதி கோவிலுக்கு இவ்வளவு சொத்துக்களா? - வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தேவஸ்தானம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி இருப்பு, தங்க இருப்பு ஆகியவை குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதியை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்தன.

இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை. அடிப்படை ஆதாரம் அற்றவை என தெரிவிக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 30.6.2019 அன்று தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே ஒன்பது லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டு வைத்துள்ளது.

அதன்படி, வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7,339 கிலோ 740 கிராம் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலர் குழு முதலீடுகள் விஷயத்தில் செலுத்திய சிறப்பு கவனம் காரணமாக தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே எட்டு லட்ச ரூபாய் பணமும்,10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் டெபாசிட்டாக இருப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...