திருப்பதி கோவிலுக்கு இவ்வளவு சொத்துக்களா? - வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தேவஸ்தானம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி இருப்பு, தங்க இருப்பு ஆகியவை குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதியை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்தன.

இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை. அடிப்படை ஆதாரம் அற்றவை என தெரிவிக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 30.6.2019 அன்று தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே ஒன்பது லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டு வைத்துள்ளது.

அதன்படி, வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7,339 கிலோ 740 கிராம் தங்கத்தை இருப்பு வைத்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலர் குழு முதலீடுகள் விஷயத்தில் செலுத்திய சிறப்பு கவனம் காரணமாக தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே எட்டு லட்ச ரூபாய் பணமும்,10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் டெபாசிட்டாக இருப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...