கோவை மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.


கோவை: கோவையில் உள்ள பிரசித்திபெற்ற மருதமலை கோவில் அடிவாரத்தில் சாலையின் இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பழங்கள், பூக்களை வாங்கி வருவதோடு, வீட்டிற்கு செல்லும் போது குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டு சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.



இதனையடுத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற கோரி நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கிய நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகள் அகற்றப்பட்டன.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...