கோவை கார் வெடிப்பு வழக்கு - கைதானோருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து முபினுடன் வெடி பொருட்களை காரில் ஏற்றியவர்கள் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜமேசா முபின் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



உக்கடம், கோட்டைமேடு அடுக்குமாடி குடியிருப்பு, புல்லுக்காடு, ஜி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.



மேலும் கோட்டைமேடு பகுதியில் வாகனத்தில் சென்றவாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...