35 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் கோவை கருப்பராயன் கோயில் திருவிழா

கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பராயன் கோயில் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள லிங்கே கவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் லிங்கே கவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...