கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பராயன் கோயில் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் மருதமலை சாலையில் உள்ள லிங்கே கவுண்டன் புதூர் பகுதியில் கருப்பராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நேற்று வெள்ளிங்கிரி மலையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் லிங்கே கவுண்டர் புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கல இசை நிகழ்ச்சியுடன் கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். அதனைதொடர்ந்து பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனைதொடர்ந்து மாலை 4 மணிக்கு மாரியம்மன் கோயிலிருந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு கருப்பராயசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை கருப்பராயசுவாமிக்கு 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி படையலிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.