கோவையில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த நண்பரை கத்தியால் குத்திய இளைஞர் - பரபரப்பு

கோவை குறிச்சி பிரிவு பேருந்து நிலையத்தில் கமலக்கண்ணன் என்பவர் தனது நண்பர் அந்தோனி என்பவரிடம் குடிக்க பணம் கேட்டு அவர் மறுத்ததால், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிட்கோ காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மகன் அந்தோணி நிக்சன் (26) ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது நண்பரான ஞானசீலன் என்பவரை பார்க்க குறிச்சி பிரிவு பேருந்து நிறுத்ததிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பழக்கமான கமலக்கண்ணன் (25) என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தோணி மது போதையில் இருந்ததால் கமலகண்ணனும் மது குடிக்க ரூ.200 கேட்டுள்ளார். அப்போது, அந்தோணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கமலகண்ணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியின் முகத்தில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை ஞானசீலன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...