கோவையில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த நண்பரை கத்தியால் குத்திய இளைஞர் - பரபரப்பு

கோவை குறிச்சி பிரிவு பேருந்து நிலையத்தில் கமலக்கண்ணன் என்பவர் தனது நண்பர் அந்தோனி என்பவரிடம் குடிக்க பணம் கேட்டு அவர் மறுத்ததால், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிட்கோ காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மகன் அந்தோணி நிக்சன் (26) ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது நண்பரான ஞானசீலன் என்பவரை பார்க்க குறிச்சி பிரிவு பேருந்து நிறுத்ததிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பழக்கமான கமலக்கண்ணன் (25) என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தோணி மது போதையில் இருந்ததால் கமலகண்ணனும் மது குடிக்க ரூ.200 கேட்டுள்ளார். அப்போது, அந்தோணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கமலகண்ணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியின் முகத்தில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை ஞானசீலன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...