கோவையில் துணி துவைத்த போது தரை மட்ட தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சோகம்

பொள்ளாச்சி அருகே வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி செல்வநாயகம் திடீரென தரைமட்ட தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் தம்பா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (52). இவர் தனது மகன் செந்தில்குமாருடன் தங்கி விவசாய பணிகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், செல்வநாயகத்திற்கு ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு பிரச்சனை இருந்ததால் அவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனிடையே நேற்று வழக்கம் போல வீட்டின் அருகே செல்வநாயகம் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தரை மட்ட தொட்டியில் தவறி விழுந்தார். இதைக்கண்ட செந்தில்குமார், உடனடியாக செல்வநாயகத்தை மீட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த அவசர கால மருத்துவர்கள் செல்வநாயகத்தை சோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக கோட்டூ்ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென தரைமட்ட தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...