டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கைது - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை அறிவொளி நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் இயங்கி வருகிறது. இந்த பாருக்கு நேற்றைய தினம் 2 மதுப்பிரியர்கள் வந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து, மதுப்பிரியர்கள் இருவரும் பாரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், பார் ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர் மற்றும் டேபிள்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களான அஜித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில், மேஜை மீது காலை போட்டதால் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் மீது, காயம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...