டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கைது - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை அறிவொளி நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் இயங்கி வருகிறது. இந்த பாருக்கு நேற்றைய தினம் 2 மதுப்பிரியர்கள் வந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து, மதுப்பிரியர்கள் இருவரும் பாரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், பார் ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர் மற்றும் டேபிள்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களான அஜித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில், மேஜை மீது காலை போட்டதால் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் மீது, காயம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...