"புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும்" கே.எம்.சி.எச் சார்பில் உலக புற்றுநோய் தினம் கையெழுத்து பிரச்சாரம்


புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல, இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க, கே.எம்.சி.எச் மருத்துவமனை உலக புற்றுநோய் தினமான 04.02.2017 இன்று “கோயம்புத்தூர் விழா” குழுவினர்களுடன் இணைந்து, கோயம்புத்தூர் மத்திய இரயில் நிலையத்தில் ஒரு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தினை தலைமை விருந்தினராக கோயமுத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சி பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கே.எம்.சி.எச்- ன் விரிவான புற்றுநோய் பராமரிப்பு மைய அணியின் மருத்துவர்கள் மூலம், புற்றுநோயை எந்த சிக்கலான நேரங்களில் சமாளிக்க முடியும் என்ற தெளிவான செய்தியை கொடுத்து நிச்சயமாக புற்றுநோய்க்கு எதிராக போராட முடியும் என்பதே ஆகம். புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், சுகாதாரத்துறை ஒரு பெரிய அளவில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் தேவைகளைப் புரிந்து, ஒரு ஆரோக்கியமான சமூகத்தின், குறிப்பாக புகைபிடிப்பவர்களை முன்னிலைப்படுத்தி ஒரு வழக்கமான அடிப்படையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

கே.எம்.சி.எச்  மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண், பெண்களுக்கான சிறந்த உடல்பரிசோதனை, மிகக்குறைந்த கட்டணத்தில் (ரூ.999க்கு) செய்து கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள முன்வந்தனர். இந்த 2017-ம் ஆண்டிற்குள் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 25,000 பெண்களுக்கு “மார்பக உடல்நலம்” மற்றும் “கர்பப்பை வாய் நலம்” பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே கே.எம்.சி.எச் மருத்துவமனையின் நோக்கமாகும்.

 

இதனை கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி, கோவை இரயில் நிலையம் ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராஜு மற்றும் “கோயம்புத்தூர் விழா” அமைப்பு குழுவினர் ஐஸ்வர்யா, கே.எம்.சி.எச் டீன் குமரன் ஆகியோர் முன்னிலையிலும் காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் பொதுமக்கள் பலர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தகவல் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கே.எம்.சி.எச் இயக்குனர் அருண் பழனிசாமி பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...