கோவையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக மத்திய - மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகன தொடக்க விழாவும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு, பயிர் காப்பீட்டு திட்ட பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் குறித்தான துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைத்தீர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மை இணை இயக்குனர் சபி அகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...