கோவை பெரியநாயக்கம்பாளையம் அருகே தடை செய்யப்பட்ட 544 கிலோ குட்கா பறிமுதல் - மூவர் கைது

பெரியநாயக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 544 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில்காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் காவலர்கள் பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகர் பகுதியில்தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கிலோ கணக்கில் தடை செய்யப்பட்டகுட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யூசுப் (31), தாமஸ் (33) மற்றும் தாஜிதின்(42) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 544 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், ஒரு டாடா எசி வாகனம், ஒரு ஆம்னி வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன், போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்.

இது போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் தயங்காமல் காவதுறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பொது மக்கள், 94981-81212 என்ற அலைபேசி எண்ணில், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், 7708-100100 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமும் தொடர்பு கொண்டு தங்கள் தகவல்களை அளிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...