கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.16 வரை மட்டுமே வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தக்காளியின் விலை மளமளவென சரிந்தது.

இதனிடையே தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி பத்து ரூபாய் முதல் 16 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையால் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை சரிவுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...