கோவை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க நகையை அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு

கோவை விமான நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் ரபிக், கீழே கிடந்த 3சவரன் தங்க நகையை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், ஆட்டோ ஓட்டுனருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரபிக். இவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு அவர்களை இறக்கி விட்டு விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கண்ணில் மூன்று சவரன் மதிக்கத்தக்க தங்கச் செயின் தரையில் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை எடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இந்த தங்கச்செயின் யாருடையது என விசாரித்துள்ளார்.

அப்பொழுது யாரும் அதற்கு உரிமை கூறாததால், அந்த தங்க நகையை விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனரை விமான நிலைய உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...