கோவை துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் உறவினரான வசந்த் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் நடத்தி தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியின் உறவினரான வசந்த் (19) என்ற இளைஞர் சிறுமியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து உறவினர் வசந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...