கோவையில் வரும் அக்.28 முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

கோவை பால் கொள்முதல் விலை உயர்வு,ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.28 ஆம் தேதி முதல் ஆவினுக்கு வழங்கப்படும் பால் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



கோவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் உற்பத்தி செய்து கொடுத்து வரும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஏற்கனவே மாநில நிர்வாகிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை முடிவு எடுக்கப்படாததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் ஆவினுக்கு வழங்கப்படும் பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் விலையை உயர்த்தாததால் மேலும் சிலரும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...