கோவை வடவள்ளியில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி - சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

வடவள்ளி அடுத்த நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில், விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்சங்கர் (46) - நந்தினி (45) தம்பதி. இவர்களது மகன் ரவி கிருஷ்ணா கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கல்லூரி நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் காலை அங்கிருந்து நண்பர்களுடன் காரில் வீடு திரும்பியுள்ளது. அப்போது, அவர்களது கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சஞ்சீவ் சங்கர் - நந்தினி தம்பதியினர் தங்களது ஓரே மகனை பறிகொடுத்த துக்கத்தில் இருந்த இருவரும் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்துனர்.

ஆனாலும் துக்கம் தாக்காமல் இருந்த தம்பதி, விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, 2 நாட்களுக்கு முன்பு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனிடையே செல்போன் அழைப்பை எடுக்காததால், சந்தேகத்தில் நந்தினியின் சகோதரன் அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் கணவன் - மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...