கோவை காவலர் பள்ளி வளாகத்தில் பாரா சைலிங்கில் பறந்த டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையாளர் சிலம்பரசன்

காவலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பறந்தனர்.



கோவை: கோவை காவலர் பள்ளி வளாகத்தில், தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி வழங்கப்பட்டது.



இதற்காக தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்த போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங்கில் பறந்து அசத்தினார்.



இந்நிலையில் இன்று என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி துவங்கிய நிலையில் அங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பங்கேற்றனர்.



முன்னதாக அவர்களுக்கு பாரா சைலிங் குறித்தான விதிமுறை மற்றும் எவ்வாறு கீழே இறங்க வேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் பாரா சைலிங்கில் பறந்தனர். அதனை தொடர்ந்து என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...