மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - உதகை தமிழகம் மாளிகையில் எம்பி ராசா தலைமையில் நடைபெற்றது

திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கியது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. உதகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் எம்பி ராசா உரை.


கோவை: உதகை தமிழகம் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ராசா நிருபர்களிடம் கூறியதாவது.



"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ வழக்கு போட்டுள்ளது" வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு குறித்து 2 ஜி வழக்கிலேயே வருமான வரித்துறை, சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு உட்பட அனைத்து பிரிவினரும் 5 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக கூறி முதன்மை விசாரணை அதிகாரி உள்ளிட்ட அனைவரும் இது என்னுடைய சொத்து இல்லை என்று விசாரித்து கூறிவிட்டார்கள்.

நான் தாெடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிவருவதாலும் எதிர்த்து குரல் கொடுப்பதாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற வழக்குகளை மீண்டும் போட்டுள்ளார்கள் என்றார்.

2ஜி வழக்கையே சந்தித்த நான் இதையும் எதிர்கொள்ள மாட்டேனா? மத்திய அரசு இந்தியாவில் கட்டிய 80 சதவீத கழிப்பிடங்கள் பயனற்று உள்ளது. கழிப்பிடங்கள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிபுணர்வு ஏற்படுத்த வில்லை. பெரும்பாலான கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லை இப்படி இருக்கும் மத்திய அரசு கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பெருமை மட்டும் பேசிக்கொள்கிறார்கள் என்றார்.

மாநிலங்கள் கொடுக்கும் வரி பணத்தை தான் மத்திய அரசு செலவு செய்கிறது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. செக்ஷன் 17 நிலத்தில்10 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

மின் இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிற் துறை மூலம் எச்பிஎப் தொழிற்சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என எம்பி ராசா கூறினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...