மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - உதகை தமிழகம் மாளிகையில் எம்பி ராசா தலைமையில் நடைபெற்றது

திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கியது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. உதகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் எம்பி ராசா உரை.


கோவை: உதகை தமிழகம் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ராசா நிருபர்களிடம் கூறியதாவது.



"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ வழக்கு போட்டுள்ளது" வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு குறித்து 2 ஜி வழக்கிலேயே வருமான வரித்துறை, சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு உட்பட அனைத்து பிரிவினரும் 5 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக கூறி முதன்மை விசாரணை அதிகாரி உள்ளிட்ட அனைவரும் இது என்னுடைய சொத்து இல்லை என்று விசாரித்து கூறிவிட்டார்கள்.

நான் தாெடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிவருவதாலும் எதிர்த்து குரல் கொடுப்பதாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற வழக்குகளை மீண்டும் போட்டுள்ளார்கள் என்றார்.

2ஜி வழக்கையே சந்தித்த நான் இதையும் எதிர்கொள்ள மாட்டேனா? மத்திய அரசு இந்தியாவில் கட்டிய 80 சதவீத கழிப்பிடங்கள் பயனற்று உள்ளது. கழிப்பிடங்கள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிபுணர்வு ஏற்படுத்த வில்லை. பெரும்பாலான கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லை இப்படி இருக்கும் மத்திய அரசு கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பெருமை மட்டும் பேசிக்கொள்கிறார்கள் என்றார்.

மாநிலங்கள் கொடுக்கும் வரி பணத்தை தான் மத்திய அரசு செலவு செய்கிறது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. செக்ஷன் 17 நிலத்தில்10 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

மின் இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிற் துறை மூலம் எச்பிஎப் தொழிற்சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என எம்பி ராசா கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...