கோவையில் தீபா ஆதரவாளர்களால் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்கம்


கோவையில் தீபாவின் ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியை துவக்கினர்.

தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவையில் தீபா ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவானந்தாகாலணி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைபாளர் ஜெயபால் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த கூட்டங்களில் பங்கெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவல்கள் அனைத்தும் தீபாவுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் பன்னீர் செல்வம் அப்போது கூறினார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...