புதிய பட்ஜெட் தாக்கல் வளமானதாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தகவல்

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டானது வளமானதாக அமைந்துள்ளது என இணைத் தலைவரும் நோவா ஃபெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ பிரிவு இயக்குநருமான மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான பட்ஜேட்டானது ஒரு சுகாதார கண்ணோட்டத்தில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக உள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும், உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு இந்த வரவு செலவு திட்டத்தின் நல்ல அம்சம் ஆகும்.

மேலும், மருத்துவத்தில் 5 ஆயிரம் புதிய போஸ்ட் கிராஜுவேட் (தங்கும்) இடங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு நாட்டில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். இரண்டு மாநிலங்களில் மருத்துவ அறிவியல், இரண்டு புதிய அகில இந்திய கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான அறிவிப்பு, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் மற்றொரு சாதகமான அம்சமாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...