கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் - புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்...!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவில் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஏராளமான இடங்களில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில்பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதி தோறும் பொது இடங்களில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.



கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஆசியாவிலேயே மிக உயரமான (19 அடி) புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில், இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரைதரிசனம் செய்து செல்கின்றனர்.



இதேபோல, மிகவும் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகரின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினரால் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண விநாயகர் சிலைகளையும் ஏராளமானபொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும்காவல்துறையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விநாயகர் சிலையை கரைக்கும் நாளன்று 1600 போலிசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...