ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு


தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது இறுதிநாட்களில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு வார காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சட்ட விரோத கும்பல் ஊடுருவிட்டதாகக் கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

எனவே, கோவை மாநகர காவல் துறை ஆணையர் கூறிய சட்ட விரோத கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், வன்முறை தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வேளை காவல்துறை தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களோடு மனித உரிமை ஆணையத்தை நாடுவோம். இதுகுறித்து சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...