ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு


தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது இறுதிநாட்களில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு வார காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சட்ட விரோத கும்பல் ஊடுருவிட்டதாகக் கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

எனவே, கோவை மாநகர காவல் துறை ஆணையர் கூறிய சட்ட விரோத கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், வன்முறை தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வேளை காவல்துறை தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களோடு மனித உரிமை ஆணையத்தை நாடுவோம். இதுகுறித்து சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...