பட்டா வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் சமத்துவக் கழகம் மகளிர் அணி செயலாளர் சித்ரா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் சுமார் 4.22 ஏக்கரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பம் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் பட்டா வழங்கக் கோரி பல முறை வலியுறுத்தி மனு அளித்தும், பல வழிகளில் முயற்சித்தும் பட்டா வழங்கவில்லை.

இப்பகுதியில் இருந்து சுமார் 60 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பட்டா இல்லாததால் மின் விளக்கு இன்றி படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்டவை எதுவும் பட்டா இல்லாமல் செய்துகொடுக்க மறுக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய  நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...