சில்லரை மற்றும் மளிகை கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சில்லரை மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர், வழக்கறிஞர் பிரிவு வீ.புஷ்பானந்தம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன். 

இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...