கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது.
கோவை: கோவையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.23-அடியாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக நிகழ்ந்து வரும் சிறுவாணி அணையில் தென் மேற்கு பருவ மழை துவங்கியதிலிருந்து நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு வரை வைக்க வேண்டும் என கோரி கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 40-ஆக உயர்ந்த போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் மதகுகளை 32-அடிக்கு திறந்து விட்டனர்.
இதனால் நீரை தேக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவு எட்டும் வரை அணையின் மதகுகளை திறக்க கூடாது என தமிழக அதிகாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக நிகழ்ந்து வரும் சிறுவாணி அணையில் தென் மேற்கு பருவ மழை துவங்கியதிலிருந்து நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு வரை வைக்க வேண்டும் என கோரி கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 40-ஆக உயர்ந்த போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் மதகுகளை 32-அடிக்கு திறந்து விட்டனர்.
இதனால் நீரை தேக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவு எட்டும் வரை அணையின் மதகுகளை திறக்க கூடாது என தமிழக அதிகாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.