கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.23-ஆக உயர்வு..!

கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.23-அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக நிகழ்ந்து வரும் சிறுவாணி அணையில் தென் மேற்கு பருவ மழை துவங்கியதிலிருந்து நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு வரை வைக்க வேண்டும் என கோரி கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 40-ஆக உயர்ந்த போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் மதகுகளை 32-அடிக்கு திறந்து விட்டனர்.

இதனால் நீரை தேக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த சில தினங்களாக சிறுவாணி மலை அடிவாரத்தில் 18.7-செ.மீ மழையும், அணை பகுதியில் 6.1-செ.மீ மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 49.53-அடியில் தற்போது 41.23-அடியாக உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவு எட்டும் வரை அணையின் மதகுகளை திறக்க கூடாது என தமிழக அதிகாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...