திருநாவுக்கரசரின் கருத்து ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கோவையில் பேட்டி

தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வினை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை யாருமே கைது செய்யப்பட வில்லை எனவும் தற்போது திருப்பூரில் கொலை செய்யப்பட்டுள்ள முத்துவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கூறினார். இறந்த முத்துவின் உடல் அருகே பிரதமர் மோடியின் படமும், பா.ஜ.க கொடியும் அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் முத்து மரணத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டதுடன் இதற்காக தமிழக முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதற்கு எதிர்மறையாக பேசுவது ஏன் என தெரியவில்லை எனவும் ஆனால் மக்களுக்கு உண்மை நிலை புரியும் எனவும் தெரிவித்தார். இதே போல தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிபப்டை ஆதாரமற்றது எனவும் தமிழிசை சவுந்திராஜன் பதிலளித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...