கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS-நிறுவனத்தில் ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் IFS-நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS -சர்வதேச நிதி சேவை மையம் மீதுநிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை, வேலூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. IFS சர்வதேச நிதி சேவை மையம் மற்றும் அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS சர்வதேச நிதி சேவை மையத்தின் ஆடிட்டர் வெண்ணிலா என்பவரது வீட்டில்சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS -சர்வதேச நிதி சேவை மையம் மீதுநிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை, வேலூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. IFS சர்வதேச நிதி சேவை மையம் மற்றும் அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS சர்வதேச நிதி சேவை மையத்தின் ஆடிட்டர் வெண்ணிலா என்பவரது வீட்டில்சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.