கோவையில் IFS-நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை..!

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS-நிறுவனத்தில் ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் IFS-நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS -சர்வதேச நிதி சேவை மையம் மீதுநிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, வேலூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. IFS சர்வதேச நிதி சேவை மையம் மற்றும் அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS சர்வதேச நிதி சேவை மையத்தின் ஆடிட்டர் வெண்ணிலா என்பவரது வீட்டில்சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...