வால்பாறையில் கனமழையால் மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயமின்றி தப்பினர்

கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கன மழையால், நகராட்சி அலுவலகம் அருகே பெரிய மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் காயமின்றி தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்து வருகிறது.



இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது.



மேலும் வால்பாறை நகராட்சி வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மரம் திடீரென உடைந்து விழுந்தது, மரம் விழுந்த இடத்தின் அருகில் பேருந்துக்காக அங்கு நின்று காத்திருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பினர்.



ஆனால் அதன் அருகில் இருந்த பூ கடை ஒன்று மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது.

வால்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சிரமமடைந்து உள்ளனர், இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் கனமழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...