கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கன மழையால், நகராட்சி அலுவலகம் அருகே பெரிய மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் காயமின்றி தப்பினர்.
கோவை: கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது.

மேலும் வால்பாறை நகராட்சி வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மரம் திடீரென உடைந்து விழுந்தது, மரம் விழுந்த இடத்தின் அருகில் பேருந்துக்காக அங்கு நின்று காத்திருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பினர்.

ஆனால் அதன் அருகில் இருந்த பூ கடை ஒன்று மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது.
வால்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சிரமமடைந்து உள்ளனர், இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் கனமழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது.
மேலும் வால்பாறை நகராட்சி வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மரம் திடீரென உடைந்து விழுந்தது, மரம் விழுந்த இடத்தின் அருகில் பேருந்துக்காக அங்கு நின்று காத்திருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பினர்.
ஆனால் அதன் அருகில் இருந்த பூ கடை ஒன்று மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது.
வால்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சிரமமடைந்து உள்ளனர், இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் கனமழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.