கோவை ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி சென்னை தொழிலதிபர் உட்பட 3-பேர் மீது வழக்குப்பதிவு..!

பொய்யான புகார் அளித்ததால், மனவேதனை அடைந்து ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். ஜோதிடர் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதி பிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி சென்னை தொழிலதிபர் உட்பட 3-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் அருகே உள்ள வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரசன்னசாமி (வயது 41) ஜோதிடர். மேலும் இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இந்தநிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பிரசன்னசாமி ஜாமீன் கேட்டு ஜே.எம். 5 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னசாமி, மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, மகள் ஆகியோர் விஷம் குடித்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஜோதிடரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த கருப்பையா இடம் பிரச்சனை சம்பந்தமாக என்னை அணுகினார். அப்போது நான் புதிதாக குபரேஷ்வரர் கோவில் கட்டி வந்தேன். அதற்கு கருப்பையா நன்கொடையாக ரூ. 1 லட்சம் கொடுத்தார். அதன் பின்னர் ரூ.75 ஆயிரம் காசோலை கொடுத்தார். மேலும் பிரதோஷ பூஜைக்காக 6 முறை ரூ. 2 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர் நான், என்னுடைய மனைவி உள்பட 4 பேர் மீது ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் செயினை வாங்கி மோசடி செய்து விட்டதாக பொய்யான புகார் அளித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றோம். இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருந்தார். ஜோதிடர் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதி பிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...