நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், வரும் 8 ஆம் தேதி முதல், பாட வாரியான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வெளியிட்டுள்ளார்.
கோவை: கோவை அரசு கலை கல்லூரியின் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் துவங்க உள்ளது.
இதுவரை கோவை அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பிற்கு சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில்,நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், வரும் 8 ஆம் தேதி முதல் பாட வாரியான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வெளியிட்டுள்ளார்.
மேலும் முழு விபரங்கள் கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.