போத்தனூர்‌ மற்றும் பொள்ளாச்சி சந்திப்பை, கோவை இரயில் சந்திப்புக்கு நிகராக அமைக்க வேண்டும்: எம்.பி சண்முகசுந்தரம் கோரிக்கை

அவரது கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர்‌, உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர்‌ பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில்‌ தொடர்பு கொண்டு, கோரிக்கைகளின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்‌.



கோவை: பொள்ளாச்‌சி நாடாளுமன்ற உறுப்பினர்‌ கு. சண்முகசுந்தரம்‌ இன்று (03/08/2022) ரயில்வே வாரிய தலைவர்‌ வினய்‌குமார்‌ திரிபாத்தியை, டெல்லி ரயில்வே தலைமை அலுவலகத்தில்‌ நேரில்‌ சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.



கோரிக்கைகள்

- பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இருந்த ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும்.

- கோவை ரயில்‌ நிலையத்தில்‌ ரயில்களின்‌ பணிக் கொள்ளளவை பூர்த்தி செய்ததால்‌, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர்‌ சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில்‌ நிலையமாக அமைக்க வேண்டும்.

- பொள்ளாச்சியில்‌ இருந்து விவசாயிகள்‌ பெரும்‌ அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில்‌ இயக்க வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்‌.

பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர்‌, உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர்‌ பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில்‌ தொடர்பு கொண்டு, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்‌ முன்வைத்துள்ள கோரிக்கைகளின்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...