கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி…!

கே.ஜி.சாவடி அருகே கேஸ் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வெற்றி விஜயன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அவரது இரு சக்கர வாகனம், ஈச்சர் வாகனத்தின் பின்னால் மோதியது.


கோவை: கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற ஈச்சர் வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெற்றி விஜயன் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு, மாலை மீண்டும் வீட்டிற்கு கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கே.ஜி.சாவடி அருகே முன்னால் சென்ற கேஸ் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வெற்றி விஜயன், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அவரது இரு சக்கர வாகனம், ஈச்சர் வாகனத்தின் பின்னால் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் வெற்றி விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த சம்பத்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...