கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லார் புளியன்தோப்பு பகுதியில், ஒரு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த சிறுமி தர்ஷா, சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடி வந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை சிறுமி எதிர்பாராதவிதமாக தொட்டதாக தெரிகிறது. அதில், மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட சிறுமியின் தாயார் அபிராமி, அங்கு ஓடி வந்தார். அப்போது, மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, மகளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த சிறுமி தர்ஷா, சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடி வந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை சிறுமி எதிர்பாராதவிதமாக தொட்டதாக தெரிகிறது. அதில், மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட சிறுமியின் தாயார் அபிராமி, அங்கு ஓடி வந்தார். அப்போது, மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, மகளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.