பணமோசடி வழக்கில் சிக்கிய ஜோதிடர் பிரசன்ன சுவாமிகள் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி, தாயார் உயிரிழப்பு பரபரப்பு

பணமோசடி வழக்கில் சிக்கிய ஜோதிடர் பிரசன்ன சுவாமிகள் குடும்பத்தோடு தற்கொலை முயற்சியால் அவரது தாய் உயிரிழந்தார், அவர், அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டில் இடம் உள்ளது.

அந்த இடத்தின் மீது நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமி என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நிலப்பிரச்சினையை சரி செய்து தருவதாக கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ரூ.25 லட்சத்து 59 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

மேலும் மாங்கல்ய பூசை செய்தால் விரைவில் பிரச்சினை தீரும் என கூறியதால், தொழிலதிபர் கருப்பைய்யா தனது மனைவியின்15 சவரன் தங்க நகையினையும் கொடுத்துள்ளார்.

நிலப்பிரச்சினையை தீரத்து வைக்காததால் இது குறித்து கருப்பையா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி ஜோதிடபிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரம் பகுதியை ஹரபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு பேர் மீதும் மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தன் மீதும், தன் மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யததால் விரக்தி அடைந்த பிரசன்ன சுவாமிகள் தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மனைவி அஸ்வினி, மகள் ஹர்சினி மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோருடன் பூச்சி மருந்தை குடித்த பிரசன்ன சுவாமிகள் தங்கள் தற்கொலைக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கருப்பையாவும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வீடியோ பதிவை செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனிடையே நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் பிரசன்ன சுவாமிகள் உட்பட நான்கு பேரும் கிடந்த நிலையில் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகு அழைத்துச் சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது வரும் வழியிலேயே பிரசன்ன சுவாமிகளின் தாயார் கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...