ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் தற்காலிக கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
அவர்களிடம் பேரூர் பேரூராட்சி சார்பாக தற்காலிக கடை அமைப்பதற்கு 30 ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோவில் அருகே சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கும் 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பேரூர் பேரூராட்சி ஊழியர்களை சூழ்ந்து கொண்டு பணம் வசூல் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.