இதில் கலந்துகொண்டவர்கள் "குழந்தைக்கு இயற்கை தந்த அற்புத வரம் தாய்ப்பால், போஷன் அபியான் திட்ட வாசகங்கள், தாயும் சேயும் நலம் பெற கொடுப்பீர் தாய்ப்பால், தாய்ப்பால் தொடர்ந்து தருவதால் புற்றுநோயும் வராதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.
கோவை: உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் பகுதி சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணி அங்கன்வாடி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் மற்றும் கல்லூரி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.
புலியகுளம் பகுதியில் உள்ள கிட்னி சென்டர் மருத்துவமனை அருகிலிருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் "குழந்தைக்கு இயற்கை தந்த அற்புத வரம் தாய்ப்பால், போஷன் அபியான் திட்ட வாசகங்கள், தாயும் சேயும் நலம் பெற கொடுப்பீர் தாய்ப்பால், தாய்ப்பால் தொடர்ந்து தருவதால் புற்றுநோயும் வராதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.