கோவையில் தொடர் கஞ்சா விற்பனை – இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..!

பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. எச்சரிக்கையை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இந்த இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிராஜன், மற்றும் முருகசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இதே போல் எச்சரிக்கையை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...