திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் பொறுப்பேற்பு..!

திருப்பூர் மாநகரத்தின் 13-வது காவல் ஆணையராக பிரபாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை குறைப்பதே தனது முதல் வேலை என தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.



இதையடுத்து, திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாநகரில் கஞ்சா பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும், அதனால் திருட்டுகள் நடந்து வருவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

எனவே, எனது முதல் பணியாக திருப்பூர் மாநகரில் கஞ்சாவை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை தடுப்பதேயாகும். அதே போல் மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் மூலம் மோசடிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், வங்கி சார்பில் யாரேனும் போன் செய்தால் அவர்களிடம் பேச வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் நேரடியாக வங்கிக்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...