நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.
கோவை: வால்பாறையில் திமுக கட்சியில் புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நகராட்சி ஆணையாளரை சந்தித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை திமுக கட்சியில் நீண்ட நாட்களாக தலைமை பொறுப்புகள் பதவிகள் வழங்காமல் இருந்த நிலையில், திமுக கட்சி தலைமை பொறுப்புகள் வழங்கியுள்ளது.
இதில் நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.
இதில் அவைத்தலைவர் செல்லமுத்து, ஆதிதிராவிடர் துணைச் செயலாளர் ராதா.சி பொன்னுசாமி, பொருளாளர் வே.நா.சுப்பையா, மாவட்ட பிரதிநிதி டென்சிங், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர்மன்ற உறுப்பினர், மகுடீஸ்வரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.