மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24 க்கு உட்பட்டஅவினாசி சாலை வழியாக டைடல் பார்க், விளாங்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், இந்த பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும், தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி பகுதியில்மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுடனும் கலந்துரையாடினார். இதே போல மழை நீரில் சேதமடைந்த சாலைகளை கண்டறியவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முத்து இராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

மேலும், இந்த பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும், தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி பகுதியில்மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுடனும் கலந்துரையாடினார். இதே போல மழை நீரில் சேதமடைந்த சாலைகளை கண்டறியவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முத்து இராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.