கோவையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு - உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24 க்கு உட்பட்டஅவினாசி சாலை வழியாக டைடல் பார்க், விளாங்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், இந்த பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும், தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி பகுதியில்மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



மேலும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுடனும் கலந்துரையாடினார். இதே போல மழை நீரில் சேதமடைந்த சாலைகளை கண்டறியவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முத்து இராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...